<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title></title>
	<atom:link href="http://raahamfm.com/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>http://raahamfm.com</link>
	<description></description>
	<lastBuildDate>Wed, 22 Feb 2012 08:10:48 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.3.1</generator>
		<item>
		<title>ஐஸ்வர்யா ராய் குழந்தைக்கு பெயர் அபிலாஷாவா? &#8211; அமிதாப் மறுப்பு</title>
		<link>http://raahamfm.com/archives/2341</link>
		<comments>http://raahamfm.com/archives/2341#comments</comments>
		<pubDate>Wed, 22 Feb 2012 08:10:48 +0000</pubDate>
		<dc:creator>thusy</dc:creator>
				<category><![CDATA[பொது]]></category>

		<guid isPermaLink="false">http://raahamfm.com/?p=2341</guid>
		<description><![CDATA[ஐஸ்வர்யா ராய் &#8211; அபிஷேக் பச்சன் குழந்தைக்கு அபிலாஷா எனப் பெயர் சூட்டியுள்ளதாக வந்த செய்திகளை மறுத்துள்ளார் அமிதாப் பச்சன்.ஐஸ்வர்யாராய்க்கும் அபிஷேக்பச்சனுக்கும் 2007-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி மும்பை மருத்துவமனையில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஏ என்ற எழுத்தில் துவங்கும் பெயராக இருக்க வேண்டும் என்பதால் பொருத்தமான பெயரை தேடி வந்தனர். அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர் யாராய் மூவரின் பெயரும் ஏயில்தான் தொடங்குகிறது. ரசிகர்களும் பெயர்களை தேர்வு [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>ஐஸ்வர்யா ராய் &#8211; அபிஷேக் பச்சன் குழந்தைக்கு அபிலாஷா எனப் பெயர் சூட்டியுள்ளதாக வந்த செய்திகளை மறுத்துள்ளார் அமிதாப் பச்சன்.<span id="more-2341"></span>ஐஸ்வர்யாராய்க்கும் அபிஷேக்பச்சனுக்கும் 2007-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி மும்பை மருத்துவமனையில் <a href="http://raahamfm.com/archives/2341/07-aishwarya-and-abhishek" rel="attachment wp-att-2342"><img class="size-full wp-image-2342 alignright" title="07-aishwarya-and-abhishek" src="http://raahamfm.com/wp-content/uploads/2012/02/07-aishwarya-and-abhishek.jpg" alt="" width="300" height="225" /></a>அழகிய பெண் குழந்தை பிறந்தது.</p>
<p>குழந்தைக்கு ஏ என்ற எழுத்தில் துவங்கும் பெயராக இருக்க வேண்டும் என்பதால் பொருத்தமான பெயரை தேடி வந்தனர்.</p>
<p>அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர் யாராய் மூவரின் பெயரும் ஏயில்தான் தொடங்குகிறது. ரசிகர்களும் பெயர்களை தேர்வு செய்து அனுப்பி வைத்து உதவுமாறு அமிதாப்பச்சன் கேட்டுக் கொண்டிருந்தார்.</p>
<p>இதையடுத்து லட்சக்கணக்கான பெயர்கள் வந்து குவிந்தன. மூன்று மாத தேடலுக்கு பின் அபிலாஷா என்ற பெயரை அபிஷேக்கும் ஐஸ்வர்யா ராயும் தேர்வு செய்ததாக செய்திகள் வந்தன. இதனை எழுத்தாளர் ஷோபா டே தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.</p>
<p>ஆனால் இதனை அமிதாப்பச்சன் மறுத்துள்ளார். இது உண்மையல்ல என்று கூறியுள்ள அவர், இப்போது வரை குழந்தையை &#8216;பேடி பி&#8217; என்றே அழைப்பதாகக் கூறியுள்ளார்.</p>
<p>வயிற்றுவலிக்காக சிகிச்சை பெற்று வரும் அமிதாப்பச்சன் பூரண குணமடைந்து வீட்டுக்கு திரும்பியதும் பெயரை அதிகாரபூர்வமாக அறிவிக்கின்றனர்.</p>
<p>ஒரு ஏ-க்கு பதில் இரண்டு ஏ எழுத்துக்கள் சேர்ந்தபடி வரும் பெயர் ரொம்ப லக்கி என ஜோதிடர்கள் கூறி வருவதால், அதற்கேற்ப பெயரொன்றையும் அமிதாப் குடும்பத்தினர் தேடி வருகிறார்களாம்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://raahamfm.com/archives/2341/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கமல் ஜோடியாக நடித்ததால் என்னை வயதான நடிகையாக பார்ப்பதா? -திரிஷா வருத்தம்</title>
		<link>http://raahamfm.com/archives/2337</link>
		<comments>http://raahamfm.com/archives/2337#comments</comments>
		<pubDate>Wed, 22 Feb 2012 05:50:48 +0000</pubDate>
		<dc:creator>thusy</dc:creator>
				<category><![CDATA[பேட்டிகள்]]></category>

		<guid isPermaLink="false">http://raahamfm.com/?p=2337</guid>
		<description><![CDATA[நடிகை திரிஷாவுக்கு வயதாகி விட்டதால் இளம் ஹீரோக்கள் ஜோடி சேர மறுப்பதாக கிசுகிசுக்கள் வெளியாகியுள்ளன இதற்கு பதில் அளித்து ஐதராபாத்தில் திரிஷா அளித்த பேட்டி வருமாறு:-  நடிகர், நடிகைளுக்கு வயது என்பது பிரச்சினையே இல்லை. நான் வயது வித்தியாசம் பார்க்காமல் எல்லா ஹீரோக்களுடனும் நடிக்கிறேன். நடிகைகள் கவனிக்க வேண்டியது கதையும், கேரக்டரும்தான். இரண்டும் சிறப்பாக அமைந்தால் யாருடன் வேண்டுமானாலும் நடிக்கலாம்.  நான் 50 வயதை தாண்டிய கமல், சிரஞ்சீவி, நாகார்ஜுனா போன்றோருக்கு ஜோடியாக நடித்துள்ளேன். இதை வைத்து [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>நடிகை திரிஷாவுக்கு வயதாகி விட்டதால் இளம் ஹீரோக்கள் ஜோடி சேர மறுப்பதாக கிசுகிசுக்கள் வெளியாகியுள்ளன இதற்கு பதில் அளித்து ஐதராபாத்தில் திரிஷா அளித்த பேட்டி வருமாறு:-<span id="more-2337"></span></p>
<div> நடிகர், நடிகைளுக்கு வயது என்பது பிரச்சினையே இல்லை. நான் வயது வித்தியாசம் பார்க்காமல் எல்லா ஹீரோக்களுடனும் நடிக்கிறேன். நடிகைகள் <a href="http://raahamfm.com/archives/2337/thrisha4" rel="attachment wp-att-2338"><img class="size-full wp-image-2338 alignright" title="thrisha4" src="http://raahamfm.com/wp-content/uploads/2012/02/thrisha4.jpg" alt="" width="250" height="384" /></a>கவனிக்க வேண்டியது கதையும், கேரக்டரும்தான். இரண்டும் சிறப்பாக அமைந்தால் யாருடன் வேண்டுமானாலும் நடிக்கலாம்.</div>
<div></div>
<div> நான் 50 வயதை தாண்டிய கமல், சிரஞ்சீவி, நாகார்ஜுனா போன்றோருக்கு ஜோடியாக நடித்துள்ளேன். இதை வைத்து என்னை வயதான நடிகையாக பார்க்க கூடாது. அஜீத், பவன்கல்யாண், ரவிதேஜா போன்ற 40 வயதுக்கும் மேற்பட்ட நடிகர்களுடனும் விஜய், பிரபாஸ், மகேஷ்பாபு போன்ற 30 வயதுக்கும் மேற்பட்ட நடிகர்களுடனும் நடித்து உள்ளேன்.</div>
<div></div>
<div>அத்துடன் சிம்பு, ஜூனியர் என்.டி.ஆர். போன்ற 20 வயதுக்கு மேற்பட்ட இளம் ஹீரோக்களுடனும் ஜோடியாக நடித்துள்ளேன். இளம் வயதினருடன் தான் நடிப்பேன். மூத்தவர்களுடன் நடிக்க மாட்டேன் என்றெல்லாம் நிபந்தனைகள் விதிப்பது இல்லை. அப்படி நிபந்தனை விதித்து இருந்தால் நல்ல படங்களை இழந்து இருப்பேன். சினிமாவிலும் நீடித்து இருக்க முடியாது.</div>
<div></div>
<div> சீனியர்களுடன் நடித்த நடிகைகளை வயதான நடிகையாக பார்ப்பது பிரமைதான். சினிமாவில் திறமைதான் முக்கியம் இந்தியில் அமிதாப்பச்சன் ஜோடியாக நடிக்க கரீனாகபூர் வரை எல்லா நடிகைகளும் விரும்புகின்றனர். அது போன்ற கலாசாரம் தமிழ் திரையுலகிலும் வர வேண்டும்.</div>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://raahamfm.com/archives/2337/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கார்த்திகா ரகசிய திருமணம்?</title>
		<link>http://raahamfm.com/archives/2332</link>
		<comments>http://raahamfm.com/archives/2332#comments</comments>
		<pubDate>Wed, 22 Feb 2012 02:30:30 +0000</pubDate>
		<dc:creator>thusy</dc:creator>
				<category><![CDATA[சினிமா செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://raahamfm.com/?p=2332</guid>
		<description><![CDATA[தூத்துக்குடி&#8217; படத்தில் அறிமுகமானவர் கார்த்திகா. அதன் பிறகு &#8216;பிறப்பு&#8217;, &#8216;ராமன் தேடிய சீதை&#8217;, &#8216;மதுரை சம்பவம்&#8217; உள்ளிட்ட படங்களில் நடித்தார். &#8216;அலையோடு விளையாடு&#8217; உள்பட இன்னும் சில படங்கள் வெளிவர வேண்டியுள்ளது. ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் குறைந்து விடவே புதுக்கோட்டை அருகில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்று விட்டார். இந்த ஆண்டு அவருக்கு திருமணம் செய்து வைக்க இருப்பதாக அவரது அம்மா கூறியிருந்தார். இந்நிலையில் கார்த்திகாவுக்கும், அவரது உறவினர் ஒருவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>தூத்துக்குடி&#8217; படத்தில் அறிமுகமானவர் கார்த்திகா. அதன் பிறகு &#8216;பிறப்பு&#8217;, &#8216;ராமன் தேடிய சீதை&#8217;, &#8216;மதுரை சம்பவம்&#8217; உள்ளிட்ட படங்களில் நடித்தார். &#8216;அலையோடு விளையாடு&#8217; உள்பட இன்னும் சில படங்கள் வெளிவர வேண்டியுள்ளது<span id="more-2332"></span>. ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் குறைந்து விடவே புதுக்கோட்டை அருகில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்று விட்டார். இந்த ஆண்டு அவருக்கு திருமணம் <a href="http://raahamfm.com/archives/2332/karthika" rel="attachment wp-att-2333"><img class=" wp-image-2333 alignright" title="karthika" src="http://raahamfm.com/wp-content/uploads/2012/02/karthika.jpg" alt="" width="179" height="240" /></a>செய்து வைக்க இருப்பதாக அவரது அம்மா கூறியிருந்தார். இந்நிலையில் கார்த்திகாவுக்கும், அவரது உறவினர் ஒருவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உள்ளூர் கோயிலில் ரகசியமாக திருமணம் நடந்ததாகவும் அவரது நெருங்கிய  உறவினர்கள் மட்டுமே அதில் கலந்து கொண்டதாகவும், தற்போது அவர் கணவர் வீட்டில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சென்னையில் உள்ள அவரது உறவினர்களிடம் விசாரித்தபோது &#8216;நிச்சயதார்த்தம் மட்டுமே நடந்துள்ளது. திருமணம் நடக்கவில்லை&#8217; என்றனர். கார்த்திகாவின் உறவினர்கள், அவர் தொடர்ந்து சினிமாவில் நடிப்பதையோ, அவர் சென்னைக்கு திரும்புவதையோ விரும்பவில்லை என்றும் அதனால்தான் திருமணத்தை ரகசியமாக நடத்தியதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://raahamfm.com/archives/2332/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>நடிகை பானுப்பிரியா வந்த கார் பறிமுதல்</title>
		<link>http://raahamfm.com/archives/2328</link>
		<comments>http://raahamfm.com/archives/2328#comments</comments>
		<pubDate>Wed, 22 Feb 2012 01:43:08 +0000</pubDate>
		<dc:creator>thusy</dc:creator>
				<category><![CDATA[சினிமா செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://raahamfm.com/?p=2328</guid>
		<description><![CDATA[பொள்ளாச்சி டூரிஸ்ட் கார் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்கத்தினர் வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெகநாதனை சந்தித்து மனு கொடுத்தனர். அதில் பொள்ளாச்சி பகுதிக்கு படப்பிடிப்புக்கு வருபவர்கள் தங்கள் பயன்பாட்டிற்கு வாடகை காரை பயன்படுத்துவதில்லை. வாடகை குறைவாக இருக்கிறது என்பதற்காக சிலரின் சொந்த காரை வாடகைக்கு எடுத்து செல்கிறார்கள். இதனால் எங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என கூறி இருந்தனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெகநாதன் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து ஆய்வாளர் சத்திய [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>பொள்ளாச்சி டூரிஸ்ட் கார் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்கத்தினர் வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெகநாதனை சந்தித்து மனு கொடுத்தனர். <span id="more-2328"></span>அதில் பொள்ளாச்சி பகுதிக்கு படப்பிடிப்புக்கு வருபவர்கள் தங்கள் பயன்பாட்டிற்கு வாடகை காரை பயன்படுத்துவதில்லை. வாடகை குறைவாக இருக்கிறது <a href="http://raahamfm.com/archives/2328/780265e9-0bcb-480f-99fe-3bdbf454a9df_s_secvpf" rel="attachment wp-att-2329"><img class="size-full wp-image-2329 alignright" title="780265e9-0bcb-480f-99fe-3bdbf454a9df_S_secvpf" src="http://raahamfm.com/wp-content/uploads/2012/02/780265e9-0bcb-480f-99fe-3bdbf454a9df_S_secvpf.jpg" alt="" width="300" height="225" /></a>என்பதற்காக சிலரின் சொந்த காரை வாடகைக்கு எடுத்து செல்கிறார்கள்.</p>
<p>இதனால் எங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என கூறி இருந்தனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெகநாதன் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து ஆய்வாளர் சத்திய மூர்த்தி மற்றும் செல்வி ஆகியோர் நேற்று பொள்ளாச்சி மீன்கரை ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒருவருக்கு சொந்தமான கார் வந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் பிரபல நடிகை பானுப்பிரியா இருந்தார்.</p>
<p>படப்பிடிப்பில் கலந்து கொள்ள வந்த அவர் வாடகை காரை எடுத்து செல்லாமல் ஒருவருக்கு சொந்தமான காரை குறைந்த வாடகைக்கு எடுத்த சென்றது தெரிய வந்தது. நடிகை பானுப்பிரியா வந்த காரை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பானுப்பிரியாவை வேறு காரில் ஏற்றி பொள்ளாச்சியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு அனுப்பி வைத்தனர்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://raahamfm.com/archives/2328/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>எஸ்.என். லட்சுமி நமக்குக் கிடைத்த பொக்கிஷம், கமல் புகழாஞ்சலி</title>
		<link>http://raahamfm.com/archives/2323</link>
		<comments>http://raahamfm.com/archives/2323#comments</comments>
		<pubDate>Tue, 21 Feb 2012 13:41:01 +0000</pubDate>
		<dc:creator>thusy</dc:creator>
				<category><![CDATA[சினிமா செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://raahamfm.com/?p=2323</guid>
		<description><![CDATA[மறைந்த நடிகை எஸ்.என். லட்சுமி மகத்தான திறமை வாய்ந்தவர். அவர் ஒரு பொக்கிஷம் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.பழம்பெரும் நடிகை எஸ்.என். லட்சுமி கமல் ஹாசனின் ஆஸ்தான நடிகை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அவர் கமலின் தேவர் மகன் முதல் விருமாண்டி வரை அனைத்து படங்களிலும் நடித்துள்ளார். தனது படங்களில் நல்ல கேரக்டர் இருந்தால் கொடுக்கத் தவறாதவர். கமலைப் போலவே லட்சுமியும் கே.பாலச்சந்தர் பட்டறையிலிருந்து வந்தவர் என்பதால் லட்சுமி மீது தனிப்பாசம் கொண்டிருந்தார் கமல். எஸ்.என்.லட்சுமி [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>மறைந்த நடிகை எஸ்.என். லட்சுமி மகத்தான திறமை வாய்ந்தவர். அவர் ஒரு பொக்கிஷம் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.<span id="more-2323"></span>பழம்பெரும் நடிகை எஸ்.என். லட்சுமி கமல் ஹாசனின் ஆஸ்தான நடிகை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அவர் கமலின் தேவர் மகன் முதல் <a href="http://raahamfm.com/archives/2323/21-kamal-lakshmi-300" rel="attachment wp-att-2324"><img class="size-full wp-image-2324 alignright" title="21-kamal-lakshmi-300" src="http://raahamfm.com/wp-content/uploads/2012/02/21-kamal-lakshmi-300.jpg" alt="" width="300" height="225" /></a>விருமாண்டி வரை அனைத்து படங்களிலும் நடித்துள்ளார். தனது படங்களில் நல்ல கேரக்டர் இருந்தால் கொடுக்கத் தவறாதவர். கமலைப் போலவே லட்சுமியும் கே.பாலச்சந்தர் பட்டறையிலிருந்து வந்தவர் என்பதால் லட்சுமி மீது தனிப்பாசம் கொண்டிருந்தார் கமல்.</p>
<p>எஸ்.என்.லட்சுமி குறித்து கமல் வருத்தம் தெரிவித்துள்ளார். மும்பையில் தற்போது விஸ்வரூபம் படப்பிடிப்பில் உள்ள கமல் லட்சுமி குறித்துக் கூறுகையில்,</p>
<p>எனக்கு மறைந்த நடிகை எஸ்.என். லட்சுமி நல்ல பழக்கம். அவரது திறமையைப் பார்த்து வியந்து பாராட்டியுள்ளேன். கே. பாலசந்தரின் நாடகப்பள்ளியில் இருந்து நான் தேர்ந்தெடுத்த பொக்கிஷம் அவர். அபாரத் திறமை வாய்ந்தவர்.</p>
<p>மைக்கேல் மதன காமராஜனில் திருட்டுப்பாட்டியாக வந்த அவர் தானா தேவர் மகனில் பெரியாத்தாவாகவும், விருமாண்டியில் பாட்டியாகவும் வந்தார் என்று என்னால் நம்பவே முடியவில்லை.</p>
<p>இளம்பெண்ணாக இருக்கையிலேயே உங்களை அம்மாவாக நடிக்க வைத்துவிட்டனர் என்று நான் கிண்டலடிப்பேன். அதற்கு அவர், ஆமாம் தம்பி, அப்படித்தான் ஆயிடுச்சு என்று சிரித்துக் கொண்டே சொல்வார். அவர் ஆர்.எஸ். மனோகர், சிவாஜி, எம்.ஜி.ஆர் என பல தலைமுறை நடிகர்களுக்கு அம்மாவாக நடித்துள்ளார்.</p>
<p>1960களுக்குப் பிறகு எஸ்.என். லட்சுமி, காக்கா ராதாகிருஷ்ணன் மற்றும் நாகேஷ் போன்ற சிறந்த நடிகர்கள் எல்லாம் காணாமல் போய்விட்டனர். அத்தகைய திறமை வாய்ந்தவர்களை கண்டுகொள்ளாமல் இருக்கக் கூடாது மாறாக போற்ற வேண்டும் என்று நினைத்தேன். அதனால் அவர் உயிருடன் இருக்கும் வரையிலும் அவரைக் கொண்டாடினேன், இனியும் கொண்டாடுவேன்.</p>
<p>கதாபாத்திரம் இது தான் என்று சொன்னாலே போதும். அவர் அதை புரிந்து கொண்டு கச்சிதமாக நடிப்பார், பிரமாதமாக நடிப்பார் என்றார் கமல்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://raahamfm.com/archives/2323/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>நடிப்பில் தானே ரோல் மாடலா இருக்கணும் என்று ஆசைப்படும் சஞ்சனா சிங்&#8230;&#8230;.</title>
		<link>http://raahamfm.com/archives/2317</link>
		<comments>http://raahamfm.com/archives/2317#comments</comments>
		<pubDate>Tue, 21 Feb 2012 09:40:42 +0000</pubDate>
		<dc:creator>thusy</dc:creator>
				<category><![CDATA[சினிமா செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://raahamfm.com/?p=2317</guid>
		<description><![CDATA[அது என்னமோ எல்லா நடிகைகளுக்குமே செல்லப் பிராணிகள் வளர்ப்பதில் அப்படி ஒரு இஷ்டம். சஞ்சனா சிங்கும் அதற்கு விலக்கல்ல.. ஆனால் அவர் வளர்ப்பது அழகான மெத்து மெத்தென்ற முயல்குட்டிகளை.இந்த முயல்கள் இருப்பது இங்கல்ல&#8230; மும்பையில். தமிழில் ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்தாலும், இந்த முயல்களுக்காகவே அவர் வாரம் ஒருமுறை மும்பை பறந்துவிடுகிறார். இவற்றுக்காக தனி படுக்கையறை, மெத்தை என மும்பை வீட்டில் ராஜ உபசாரமாம். ஏங்க இது கொஞ்சம் ஓவரா இல்லையா என்றால்&#8230;, &#8220;அப்படியெல்லாம் சொல்லாதீங்க. முயல்கள் ரொம்ப [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>அது என்னமோ எல்லா நடிகைகளுக்குமே செல்லப் பிராணிகள் வளர்ப்பதில் அப்படி ஒரு இஷ்டம். சஞ்சனா சிங்கும் அதற்கு விலக்கல்ல.. ஆனால் அவர் வளர்ப்பது அழகான மெத்து மெத்தென்ற முயல்குட்டிகளை.<span id="more-2317"></span>இந்த முயல்கள் இருப்பது இங்கல்ல&#8230; மும்பையில். தமிழில் ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்தாலும், இந்த முயல்களுக்காகவே அவர் வாரம் ஒருமுறை மும்பை <a href="http://raahamfm.com/archives/2317/__20110824_1531424832" rel="attachment wp-att-2318"><img class=" wp-image-2318 alignright" title="__20110824_1531424832" src="http://raahamfm.com/wp-content/uploads/2012/02/20110824_1531424832-e1329817118205.jpg" alt="" width="286" height="431" /></a>பறந்துவிடுகிறார். இவற்றுக்காக தனி படுக்கையறை, மெத்தை என மும்பை வீட்டில் ராஜ உபசாரமாம்.</p>
<p>ஏங்க இது கொஞ்சம் ஓவரா இல்லையா என்றால்&#8230;, &#8220;அப்படியெல்லாம் சொல்லாதீங்க. முயல்கள் ரொம்ப மென்மையானவை. ரொம்ப அற்புதமான பாசப் பிராணிகள். நான் எவ்வளவு டென்ஷனா இருந்தாலும், ஒரு முறை இந்த முயல் குட்டிகளை தடவிப் பார்த்தாலே, யோகா பண்ண மாதிரி ஒரு ரிலாக்ஸ் மூடுக்கு வந்துடுவேன். இப்போ நான்கு குட்டிகள் வேறு போட்டிருக்கு. அதனால அவற்றைப் பார்த்துக் கொள்வதில் தனி சந்தோஷம் எனக்கு,&#8221; என்கிறார் இந்தி கொஞ்சும் தமிழில்.</p>
<p><strong><span style="color: #99cc00;">முயலுக்கே நேரத்தை ஒதுக்கினால், பட வாய்ப்புகள் என்னாவது?</span><br />
</strong><br />
&#8220;அது முக்கியம்தான். என் முதல் படம் ரேணிகுண்டா. அப்படியொரு அழுத்தமான வேடம். அந்த மாதிரி வேடம் எல்லோருக்கும் அமைந்துவிடாது. ஒரு ஹீரோனுக்குக் கூட கிடைக்காத பேர் எனக்கு கிடைச்சது. நண்பர்கள் கேட்டதற்காக கோ, மறுபடியும் ஒரு காதஸ், மயங்கினேன் தயங்கினேன், வெயிலோடு விளையாடு படங்களில் கெஸ்ட் ரோல் பண்ணேன். ஜஸ்ட் ஐட்டம் நம்பர்ஸ். ஆனா அதிலும் நான் தனியா தெரிஞ்சேன். கோ முதல் பாட்டை உங்களால மறக்க முடியுமா&#8230;சினிமாவில் நண்பர்கள் ரொம்ப முக்கியம்.</p>
<p>இப்போ யாருக்குத் தெரியும் படத்தில் செம ரோல், அதுவும் ஹீரோயின் வேடம் கிடைச்சிருக்கு. பார்க்கிறவங்கள அதிர வைக்கிற மாதிரி ஒரு கேரக்டர் அது. அடுத்த வருகிற எல்லாமே எனக்கு தமிழ் சினிமாவில் ஒரு அந்தஸ்து தரக்கூடிய படங்கள்தான். முத்திரை பதித்த இயக்குநர்களின் படைப்புகள். கேஎஸ் அதியமானின் தப்புத் தாளங்கள், தமிழ்ப் படம் சிஎஸ் அமுதனின் இரண்டாவது படம் என என் நம்பிக்கையை உயர்த்தும் படங்கள். சந்தோஷமா இருக்கு.</p>
<p>இது ஒரு ஆரம்பம்தான். இனி எல்லாமே நல்லா நடக்கும்னு நம்பிக்கை இருக்கு. எனக்கும் அவார்டு படம் பண்ண ஆசைதான். என்னைப் பொறுத்தவரை பணம் முக்கியமில்லை. நண்பர்கள் முக்கியம். நாலுபேருக்கு உதவியா இருக்கணும், தேவைக்கேத்த அளவு பணம் இருக்கணும்&#8230; அவ்வளவுதான்!,&#8221; என்கிறார் சஞ்சனா.</p>
<p>இன்றைய தேதிக்கு சஞ்சனா சிங்தான் கோடம்பாக்கத்தின் ஹாட் கிளாமர் கேர்ள். கவர்ச்சியில் நமீதாவின் வாரிசு என்றால், நடிப்பில் தானே ரோல் மாடலா இருக்கணும் என்று ஆசைப்படும் அளவு ஆர்வமான நடிகை.</p>
<p>&#8216;ஹோம்லியா கிளாமரா? எது உங்க சாய்ஸ்&#8217; என்றால், &#8220;இதை நிறையபேர் கேக்குறாங்க&#8230; இரண்டுமே ஒரு நடிகையின் இரு பக்கங்கள். எனக்கு ரெண்டு ரோலுமே ஓகேதான். இரண்டையுமே அதன் எல்லை வரை போய் சவாலா எடுத்து நடிக்கணும். ஒண்ணு கைத்தட்டல் வாங்கணும்.. இல்லைன்னா, கவர்ச்சில கலக்கணும்&#8230; அதான் சஞ்சனா!,&#8221; என்றார்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://raahamfm.com/archives/2317/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>நிர்வாண கோலத்தில் திருமணம் – அதிர்ச்சியளித்த தம்பதியினர்(வீடியோ இணைப்பு)</title>
		<link>http://raahamfm.com/archives/2313</link>
		<comments>http://raahamfm.com/archives/2313#comments</comments>
		<pubDate>Tue, 21 Feb 2012 06:33:23 +0000</pubDate>
		<dc:creator>thusy</dc:creator>
				<category><![CDATA[அந்தரங்கம்]]></category>
		<category><![CDATA[பொது]]></category>

		<guid isPermaLink="false">http://raahamfm.com/?p=2313</guid>
		<description><![CDATA[மனித வாழ்வில் மிகவும் முக்கிய நிகழ்வாக திருமணம் உள்ளது. அவர் தம் கலாச்சாரம், பண்பு ஒழுங்குகளுக்கு அமைய வித்தியாசம் வித்தியாசமாக நடாத்தி மகிழ்வர். ஆனால் Jamaica வில் ஒரு வித்தியாசமான முறையில் தம் வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்துள்ளனர் இந்த தம்பதிகள். Jamaica,Negril கடற்கரையில் நிர்வாண கோலத்தில் இந்த விசித்திர  திருமணம் இடம்பெற்றுள்ளதே இதன் சிறப்பு. இதில் ஒன்பது ஜோடியினர் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதில் கலந்துகொண்ட மணமகள்கள் முகத்திரைகளை மாத்திரம் அணிந்திருந்தனர். ஆனால் இவர்களின் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>மனித வாழ்வில் மிகவும் முக்கிய நிகழ்வாக திருமணம் உள்ளது.<span id="more-2313"></span></p>
<p><a href="http://raahamfm.com/archives/2313/athirchi524-250x150" rel="attachment wp-att-2314"><img class="size-full wp-image-2314 alignright" title="athirchi524-250x150" src="http://raahamfm.com/wp-content/uploads/2012/02/athirchi524-250x150.jpg" alt="" width="250" height="150" /></a>அவர் தம் கலாச்சாரம், பண்பு ஒழுங்குகளுக்கு அமைய வித்தியாசம் வித்தியாசமாக நடாத்தி மகிழ்வர்.</p>
<p>ஆனால் Jamaica வில் ஒரு வித்தியாசமான முறையில் தம் வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்துள்ளனர் இந்த தம்பதிகள்.</p>
<p>Jamaica,Negril கடற்கரையில் நிர்வாண கோலத்தில் இந்த விசித்திர  திருமணம் இடம்பெற்றுள்ளதே இதன் சிறப்பு.</p>
<p>இதில் ஒன்பது ஜோடியினர் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.</p>
<p>இதில் கலந்துகொண்ட மணமகள்கள் முகத்திரைகளை மாத்திரம் அணிந்திருந்தனர். ஆனால் இவர்களின் உடலில் சில இடங்கள் நிறச் சாயங்களினால் பூசப்பட்டிருந்தன.</p>
<p>இவ் திருமண வைபவத்தை பிரபல உல்லாச ஹோட்டலொன்று ஒழுங்கு செய்திருந்தது.</p>
<p><object width="724" height="398" classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"><param name="allowFullScreen" value="true" /><param name="allowscriptaccess" value="always" /><param name="src" value="http://www.youtube.com/v/3qX1aeJnRLw?version=3&amp;hl=en_US" /><param name="allowfullscreen" value="true" /><embed width="724" height="398" type="application/x-shockwave-flash" src="http://www.youtube.com/v/3qX1aeJnRLw?version=3&amp;hl=en_US" allowFullScreen="true" allowscriptaccess="always" allowfullscreen="true" /></object></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://raahamfm.com/archives/2313/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சமந்தாவை காதல் தொல்லை செய்யும் சந்தானம்…!</title>
		<link>http://raahamfm.com/archives/2309</link>
		<comments>http://raahamfm.com/archives/2309#comments</comments>
		<pubDate>Tue, 21 Feb 2012 06:01:30 +0000</pubDate>
		<dc:creator>thusy</dc:creator>
				<category><![CDATA[சினிமா செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://raahamfm.com/?p=2309</guid>
		<description><![CDATA[நடிகை சமந்தாவுக்கு, காமெடி நடிகர் சந்தானம் காதல் தொ‌ல்லை கொடுத்து இம்சை பண்ணுகிறாராம். இது நிஜத்தில் அல்ல, சினிமாவில் தான். தெலுங்கில் மஹதீரா எனும் மாபெரும் வெற்றி படத்தை இயக்கிய ராஜ மெளலி, அடுத்து நான் ஈ என்ற படத்தை தமிழ்மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழியிலும் இயக்கி வருகிறார். இதில் தெலுங்கு நடிகர் நானி, சமந்தா, சந்தானம் ஆகியோர் நடித்து வருகின்றனர். படம்குறித்து டைரக்டர் ராஜ மெளலி கூறுகையில், படத்தின் கதைப்படி ஹீரோயின் சமந்தா, ஏழ்மையான ஹீரோ [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>நடிகை சமந்தாவுக்கு, காமெடி நடிகர் சந்தானம் காதல் தொ‌ல்லை கொடுத்து இம்சை பண்ணுகிறாராம். <span id="more-2309"></span>இது நிஜத்தில் அல்ல, சினிமாவில் தான். தெலுங்கில் மஹதீரா எனும் மாபெரும் வெற்றி படத்தை இயக்கிய ராஜ மெளலி, அடுத்து நான் ஈ என்ற படத்தை தமிழ்<a href="http://raahamfm.com/archives/2309/nt_120220125102000000-e1329751115705" rel="attachment wp-att-2310"><img class="size-full wp-image-2310 alignright" title="NT_120220125102000000-e1329751115705" src="http://raahamfm.com/wp-content/uploads/2012/02/NT_120220125102000000-e1329751115705.jpg" alt="" width="300" height="185" /></a>மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழியிலும் இயக்கி வருகிறார். இதில் தெலுங்கு நடிகர் நானி, சமந்தா, சந்தானம் ஆகியோர் நடித்து வருகின்றனர்.</p>
<p>படம்குறித்து டைரக்டர் ராஜ மெளலி கூறுகையில், படத்தின் கதைப்படி ஹீரோயின் சமந்தா, ஏழ்மையான ஹீரோ நானியை லவ் பண்ணுகிறார். அதேப்போல் வில்லன் சுதீப்பும் சமந்தாவை லவ் பண்ண, சமந்தா அவரது காதலை ஏற்க மறுக்கிறார். இதனால் ஆத்திமுற்ற வில்லன் சுதீப், ஹீரோ நானியை கொன்று விடுகிறார். பின்னர் ஹீரோ நானி மறுபிறவியில் ஈ -ஆக பிறவியெடுத்து எதிரியை எப்படி அழிக்கிறார் என்பதை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறேன். இதில் விஷேசம் என்னவென்றால் தமிழ் சினிமாவில் ஈ-யை வைத்து படம் வருவது இதுதான் முதல்முறை. அதுமட்டுமல்ல இந்தபடத்தில் சந்தானத்தை லவ் பண்ணும் கேரக்டரில் சமந்தா நடிக்கிறார். நானி கொல்லப்பட்டதும், மறுபிறவியில் சந்தானத்தை, ஹீரோ நானியாக நினைத்து லவ் பண்ணுகிறார் சமந்தா. அதேபோல் சந்தானமும், சமந்தாவை துரத்தி, துரத்தி லவ் பண்ணுகிறார். சந்தானம் இதுவரை நடித்த படங்களிலேயே, இந்தபடத்தில் தான் அவருக்கு டயலாக் ரொம்ப கம்மி, அதேசமயம் அவருடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் விதமாக இப்படம் அமையும் என்றார்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://raahamfm.com/archives/2309/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>குஷ்பு மீதான தேர்தல் வழக்கை விசாரிக்க தடை &#8211; மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு</title>
		<link>http://raahamfm.com/archives/2305</link>
		<comments>http://raahamfm.com/archives/2305#comments</comments>
		<pubDate>Tue, 21 Feb 2012 05:35:37 +0000</pubDate>
		<dc:creator>thusy</dc:creator>
				<category><![CDATA[பொது]]></category>

		<guid isPermaLink="false">http://raahamfm.com/?p=2305</guid>
		<description><![CDATA[தேர்தல் விதியை மீறியதாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் நடிகை குஷ்பு மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை நத்தம் நீதிமன்றம் விசாரிக்க இடைக்கால தடை விதித்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது நடிகை குஷ்பு, தமிழகம் முழுவதும் தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட விஜயனை ஆதரித்தும் அந்த தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். தேர்தல் விதிமுறையை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டதாக [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>தேர்தல் விதியை மீறியதாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் நடிகை குஷ்பு மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை நத்தம் நீதிமன்றம் விசாரிக்க இடைக்கால தடை விதித்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.<span id="more-2305"></span>கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது நடிகை குஷ்பு, தமிழகம் முழுவதும் தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்<a href="http://raahamfm.com/archives/2305/kuspu-2" rel="attachment wp-att-2306"><img class="size-full wp-image-2306 alignright" title="kuspu-2" src="http://raahamfm.com/wp-content/uploads/2012/02/kuspu-2.jpg" alt="" width="466" height="409" /></a>. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட விஜயனை ஆதரித்தும் அந்த தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.</p>
<p>தேர்தல் விதிமுறையை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டதாக கூறி நடிகை குஷ்பு, விஜயன் ஆகியோர் மீது நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு நத்தம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.</p>
<p><span style="color: #99cc00;"><strong>சட்ட விரோதமல்ல&#8230;</strong></span></p>
<p>இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்கில் ஆஜராக தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் நடிகை குஷ்பு, விஜயன் ஆகியோர் மதுரை உயர்நீதின்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி டி.சுதந்திரம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் எம்.சுபாஷ்பாபு, மோகன்குமார் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.</p>
<p>வாதத்தின்போது, &#8220;நடிகை குஷ்பு, விஜயன் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 143 (சட்டவிரோதமாக கூடுதல்), 290 (பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் புகாரில், சட்டவிரோதமாக கூடியது தொடர்பாகவோ, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தது தொடர்பாகவோ எதுவும் கூறப்படவில்லை. தேர்தல் விதியை மீறியதாகவே புகாரில் கூறப்பட்டுள்ளது.</p>
<p>எனவே மனுதாரர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 143, 290 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. எனவே அவர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்,&#8221; என்று வாதிட்டனர்.</p>
<p><span style="color: #99cc00;"><strong>இடைக்கால தடை</strong></span></p>
<p>மனுவை விசாரித்த நீதிபதி, நடிகை குஷ்பு, தி.மு.க பிரமுகர் விஜயன் ஆகியோர் மீதான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணைக்காக நத்தம் நீதிமன்றத்தில் இனி குஷ்பு ஆஜராக விலக்கு அளித்தும் உத்தரவிட்டார்.</p>
<p>இதே நத்தம் நீதிமன்றத்தில் நடிகர் வடிவேலு மீதும் தேர்தல் விதிமீறல் வழக்கு நடந்து வருகிறது. அவரும் இதே திமுக வேட்பாளர் விஜயனை ஆதரித்துதான் பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://raahamfm.com/archives/2305/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>புத்துணர்ச்சியோடு தொடங்குங்கள் புதுமண வாழ்க்கையை….</title>
		<link>http://raahamfm.com/archives/2301</link>
		<comments>http://raahamfm.com/archives/2301#comments</comments>
		<pubDate>Tue, 21 Feb 2012 02:52:04 +0000</pubDate>
		<dc:creator>thusy</dc:creator>
				<category><![CDATA[பொது]]></category>

		<guid isPermaLink="false">http://raahamfm.com/?p=2301</guid>
		<description><![CDATA[ஆணுக்கும், பெண்ணிற்கும் திருமணம் என்பது அழகான, அம்சம். காதலிக்கும் போது எத்தனையோ விசயங்களை பேசியிருக்கலாம். பொய் கூட காதலின்போது ரசிக்கப்படும். அதே பொய் திருமணத்திற்குப் பின்னர் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. எனவே நிச்சயிக்கப்பட்ட திருமணமோ, காதல் திருமணமோ எதுவென்றாலும் திருமணமான புதிதில் தம்பதியர் கடைபிடிக்கவேண்டிய நடைமுறைகளை கூறியுள்ளனர் உளவியல் வல்லுநர்கள். திருமணமான முதல்நாள் இரவில் புதுமணத் தம்பதியரின் உடல்கள் மட்டும் சங்கமிப்பதில்லை உள்ளங்களும் சங்கமிக்கின்றன. அங்கே சந்திக்கும் இரு உள்ளங்களும் தங்களை முழுமையாக புரிந்திருக்க வேண்டும். அவர்களது மனமும் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>ஆணுக்கும், பெண்ணிற்கும் திருமணம் என்பது அழகான, அம்சம். காதலிக்கும் போது எத்தனையோ விசயங்களை பேசியிருக்கலாம்.<span id="more-2301"></span> பொய் கூட காதலின்போது ரசிக்கப்படும். அதே பொய் திருமணத்திற்குப் பின்னர் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. எனவே நிச்சயிக்கப்பட்ட திருமணமோ, <a href="http://raahamfm.com/archives/2301/dsc-0293" rel="attachment wp-att-2302"><img class="size-full wp-image-2302 alignright" title="DSC-0293" src="http://raahamfm.com/wp-content/uploads/2012/02/DSC-0293.jpg" alt="" width="500" height="307" /></a>காதல் திருமணமோ எதுவென்றாலும் திருமணமான புதிதில் தம்பதியர் கடைபிடிக்கவேண்டிய நடைமுறைகளை கூறியுள்ளனர் உளவியல் வல்லுநர்கள்.</p>
<p>திருமணமான முதல்நாள் இரவில் புதுமணத் தம்பதியரின் உடல்கள் மட்டும் சங்கமிப்பதில்லை உள்ளங்களும் சங்கமிக்கின்றன. அங்கே சந்திக்கும் இரு உள்ளங்களும் தங்களை முழுமையாக புரிந்திருக்க வேண்டும். அவர்களது மனமும் &#8220;உறவு&#8221;க்கு தயாராக இருக்க வேண்டும். அப்போதுதான் அங்கே சந்தோச சாம்ராஜ்யம் நடைபெறும்.</p>
<p><span style="color: #99cc00;"><strong>பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்</strong></span></p>
<p>தம்பதியரியரிடையே சரியான பேச்சுவார்த்தை இருப்பது அவசியம். எதையும் கூறும் முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசித்து பேசவேண்டும். எதையும் தெரிவிப்பதில் நேர்மையை கடைபிடிப்பது அவசியம்.</p>
<p>ஒருவர் மட்டுமே பேசக்கூடாது மற்றவரையும் பேச அனுமதிக்கவேண்டும். நீங்கள் பேசுவதை விட துணைவரை பேசவிட்டு கேட்டுக்கொண்டிருப்பது மிகச்சிறந்த நன்மதிப்பினை ஏற்படுத்தும். எதிர்காலத்தைப் பற்றி பேசுங்கள். பேச்சானது எப்பவுமே நேர்மறை எண்ணத்துடன் இருக்கவேண்டும்.</p>
<p><span style="color: #99cc00;"><strong>வார விடுமுறை வசந்தம்</strong></span></p>
<p>வாரவிடுமுறை நாட்களில் வீட்டைவிட்டு கண்டிப்பாக வெளியே செல்லுங்கள். சினிமா, பார்க், ஹோட்டல் எங்கு வேண்டுமானலும் இருக்கலாம். தனியாக இருவரும் கிளம்புங்கள். அமைதியான சூழலில் அமர்ந்து இருவரும் பேசி மகிழுங்கள். வாரம் ஒருமுறையாவது இரவு நேரத்தில் டின்னருக்கு ஏற்பாடு செய்யலாம். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் புதுமணத் தம்பதியர் அமர்ந்து பேசுவது அன்பை அதிகப்படுத்தும்.</p>
<p><span style="color: #99cc00;"><strong>புகழ்ச்சி அவசியம்</strong></span></p>
<p>காதலிக்கும் போது எத்தனையோ புகழ்ச்சி வார்த்தைகளை கூறியிருக்கலாம். திருமணத்திற்குப்பின்னல் அதை பின்பற்றுவதில் தவறேதும் இல்லை. ஏனெனில் புதுமணப் பெண்கள் முதலில் எதிர்பார்ப்பது கணவரின் புகழுரையைத்தான்.</p>
<p><span style="color: #99cc00;"><strong>தவறுக்கு மன்னிப்பு</strong></span></p>
<p>புதுமண வாழ்க்கையில் தவறு நிகழ வாய்ப்பு ஏற்படுவது குறைவு. அதே சமயத்தில் எங்காவது செல்ல திட்டமிட்டு விட்டு அழைத்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் தவறாமல் மன்னிப்பு கேட்கலாம். அது உங்கள் மீதான மதிப்பினை அதிகரிக்கும்.</p>
<p><span style="color: #99cc00;"><strong>சந்தோச சாம்ராஜ்யம்</strong></span></p>
<p>குழந்தை பற்றிய விஷயத்தை முதலிரவிலேயோ அல்லது அதற்கு முன்போ முடிவெடுத்து விடுங்கள். குழந்தை இப்போதைக்கு வேண்டாம் என்றால் பாதுகாப்பான கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்தி உறவில் ஈடுபடுங்கள். குழந்தை உடனே வேண்டும் என்பவர்கள், குழந்தை உடனே பிறக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் உறவு கொள்ள வேண்டாம். காரணம், அந்த எண்ணமே உங்களுக்கு மன நெருக்கடியை ஏற்படுத்தி விடலாம்.</p>
<p>உங்கள் மகிழ்ச்சிக்காகவும், துணையின் மகிழ்ச்சிக்காகவும் மட்டுமே உறவை வைத்திடுங்கள். செக்ஸ் என்பது அற்புதமான, அருமையான மருந்து என்பதை புதுமணத் தம்பதியர் உணரவேண்டும். இந்த மருந்து மட்டும், உடலுக்கும், மனதுக்கும் சரியாக கிடைத்து வந்தால் மனநெருக்கடி ஏற்பட வாய்ப்பில்லை. அப்புறம் என்ன தம்பதியரிடையே சந்தோச சாம்ராஜ்யம்தான் ஜமாயுங்கள்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://raahamfm.com/archives/2301/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>

