ஒரு படத்தை தொடங்க கமல் மிகச்சரியாக திட்டமிடுவார் என்றாலும், எப்போதுமே இத்தனை தாமதம் ஏற்பட்டதில்லை.
‘விஸ்வரூப’த்தை முதலில் செல்வராகவன் இயக்க ஒப்புக்கொண்டு இருந்த நிலையில், கீதாஞ்சலிக்கும் தனக்குமான கல்யாண பேச்சு வார்த்தைகளில் சிக்கிக் கொண்டதால் கமலே செல்வராகவனுக்கு விடுதலை கொடுத்து அனுப்பினார்.
ஆனால் வெளியே போன செல்வராகவன், ‘மயக்கம் என்ன’ படத்தில் இருந்து ஆண்ட்ரியாவை தூக்கி விட்டு, ரிச்சா கங்கோபாத்யாயை திடீரென்று ஹீரோயின் ஆக்கினார்.
உண்மையில் ‘விஸ்வரூபம்’ புராஜெக்டில் முதலில் செல்வராகவன் இருந்தபோது, கமலுக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகளில் முதல் கதாநாயகியாக முதலில் ரிச்சாவைத்தான் கமலுடன் சேர்ந்து காஸ்ட் செய்தாராம் செல்வராகவன்.
ஆனால் ‘விஸ்வரூப’த்தில் இருந்து செல்வராகவன் வெளியே வந்த பிறகு ரிச்சாவை ‘மயக்கம் என்ன’ படத்தில் நடியுங்கள் என்று அழைத்துக் கொண்டு வந்து விட்டாராம்.
நம்மிடமே செல்வராகவன் இப்படி நடந்து கொண்டுவிட்டாரே என்று அதன்பிறகே சோனாக்ஷியை அழைத்திருக்கிறார்கள்.
தற்போது அவரும் இல்லை என்றான நிலையில் அனுஷ்கா, ஸ்ரேயா எனப் பலரைத் தேர்ந்தெடுத்து யாரும் பொருத்தமாக இல்லாததால் நாயகி இல்லாமலேயே பாதிப் படத்தை முடித்தார் கமல்.
தற்போது பஞ்சாபைப் பூர்வீகமாகக் கொண்டு நியூயார்க்கில் 2008 அமெரிக்கா வாழ் இந்திய அழகியாகத் தேர்வு செய்யப்பட்டு, பிரபல அமெரிக்க தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் உள்ள பூஜா குமாரையும், ஆண்ட்ரியாவையும் இரண்டு முதன்மை கதாநாயகிகளாக ஒப்பந்தம் செய்து படப்பிடிப்புக்காக ஜோர்டான் நாட்டுக்குப் பறந்திருக்கிறார்.
உண்மையில் செல்வாவை பற்றி ஆண்ட்ரியா கமலிடம் சொன்ன சில சூடான தகவல்களுக்காக கலைஞானி லட்டு மாதிரி கொடுத்த வாய்ப்புதான் ‘விஸ்வரூபம்’ என்கிறார்கள் கலைஞானிக்கு நெருக்கமான நட்பு வட்டத்தில் இருந்து…!
போட்டுக்கொடுத்து கெடைச்ச பரிசா….?! இதயே ஃபாலோ பண்ணுனீங்கன்னா ரொம்ப பெரிய இடத்துக்கு வந்துடுவீங்க…. கருமம்டா!
நன்றி : கூடல்



